Showing posts with label Poem.. Show all posts
Showing posts with label Poem.. Show all posts

Thursday, 16 May 2013

உன் ஞாபகம் சுமந்தோம்:




எப்போதுமே உன்
ஞாபகம் சுமந்த ஒன்றை
விட்டுச் செல்வது
உன் வழக்கம்…
நடந்த காலடித்தடங்கள்
உதிர்ந்த ஒற்றை ரோஜா
ஒட்டியிருந்த ஸ்டிக்கர் பொட்டு
அறுந்த ஒற்றை செருப்பு
ஊதி உடைத்த பலூன்
உட்கார்ந்த நாற்காலி
முத்தம் கொடுத்த குழந்தை
கைபட்ட காசுகள்
கடத்திவிட்ட புத்தகங்கள்
வெளிவிட்ட சுவாசம்
காற்றிலே உன் வாசம்
பதுக்கிய உன் சிரிப்புகள்
திருடிய பார்வைகள்
ஆழமாய் சில ஆச்சரியங்கள்..
பெரியதாய் சில பெருமூச்சுகள்..
இப்படி ஏதேனும் ஒன்றை
அதை எனக்காகவே
விட்டுச் சென்றாய்
என எண்ணிக் கொள்வது
என் வழக்கம்…
உன் ஞாபகங்களை சுமந்தது
என் தவறு
இன்று
நீ
என்னை
விட்டுச் செல்கிறாய்….
உன் ஞாபகம் சுமந்தோம்
தனித்து விடப்பட்டோம்…
என
என்னோடு
அழுது
புலம்பிக் கொண்டிருக்கின்றன
அவைகளும்…….