Friday 23 November 2012

விபத்தால் பிழைத்தது



எங்குமே நிற்காமல்
எதையுமே நேசிக்காமல்
இழந்ததை மீட்பதாய் எண்ணி
இருப்பதையும் இழந்து கொண்டு
எங்கே ஓடுகிறோம்…?
எதற்காய் ஓடுகிறோம்..?
என்றறியாமல் ஓடிக் கொண்டிருக்கும்
இயந்திரகதி வாழ்க்கையின்
இரண்டு நிமிடங்களை இழுத்து நிறுத்தியது
அந்த நெடுஞ்சாலை விபத்து….
கூட்டத்தினரின் பிரார்தனைகளையும்
உச்சுக் கொட்டல்களையும்
உதாசீனப்படுத்தி உருகி ஓடியது
அடிபட்டு கிடப்பவனின் உயிர்….
அந்த நிமிடங்களில்
அவன் இறந்திருந்தான்…..
அவசர சிகிச்சையில் இருந்த
மனிதநேயம் பிழைத்துக் கொண்டது……

No comments:

Post a Comment